search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வன விலங்கு"

    • விவசாயிகள் மிகுந்த பாதிப்பை சந்தித்து வந்தனர்.
    • விலங்குகள் புகுவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெரும்பாறை:

    கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பண்ணைக்காடு, தாண்டிக்குடி, பூலத்தூர், மங்களம்கொம்பு, பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூர், ஆடலூர், பாச்சலூர், பன்றிமலை, சோலைக்காடு உள்ளிட்ட மலைக்கிராமங்களில் காபி சாகுபடி பிரதான தொழிலாக உள்ளது. மேலும் காபிக்கு ஊடுபயிராக மிளகு, வாழை, ஏலக்காய், அவக்கோடா, ஆரஞ்சு, எலுமிச்சை, சவ்சவ், அவரை, பீன்ஸ் உள்ளிட்டவற்றையும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் காட்டெருமை அட்டகாசம் அதிகரித்துள்ளது. காட்டெருமைகள் தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதேபோல் காட்டு யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகளும் பயிர்களை நாசம் செய்து வருகின்றன. அவ்வாறு வரும் விலங்குகள், தோட்டத்தின் முன்வேலிகளை எளிதில் உடைத்து விட்டு உள்ளே புகுந்து விடுவதால் விவசாயிகள் மிகுந்த பாதிப்பை சந்தித்து வந்தனர். இது குறித்து வனத்துறையினரிடம் புகார் அளித்திருந்த போதும் அதனையும் மீறி பயிர்கள் சேதமடைவது தொடர்ந்து வந்தது.

    இதையடுத்து விலங்குகளிடம் இருந்து பயிர்களை காப்பாற்றுவதற்காக சேலைகளால் வேலி அமைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே வண்ணத்தில் சேலைகளை கட்டாமல் பல்வேறு நிறங்களில் வயல்களுக்கு சேலையால் வேலி அமைத்துள்ளனர். இரவு நேரங்களில் இதை பார்க்கும் போது கண்ணை கூசும் வகையில் இருக்கும் என்பதால் விலங்குகள் அதன் அருகே வருவதற்கு தயக்கம் காட்டி வேறு இடத்துக்கு சென்று விடும் என விவசாயிகள் தெரிவித்தனர். இருப்பினும் விளை நிலங்களுக்குள் விலங்குகள் புகுவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கம்பியில் சிக்கி மீட்கப்பட்டிருக்கும் சிறுத்தை ஆண் சிறுத்தை என்பதும் வயது சுமார் 5 இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவி்க்கின்றனர்.
    • இரும்பு வலை வைத்தவர்கள் யார் என்பது குறித்து பாலக்கோடு வனத்துறைனர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாலக்கோடு:

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கணவனஅள்ளி கிராமத்தை யொட்டியுள்ள கரடு பகுதியில் வித்தியாசமான உறுமல் சத்தம் வந்து கொண்டிருக்கவே சத்தம் வந்த இடத்திற்கு கிராம மக்கள் சென்று பார்த்துள்ளனர்.

    அங்கு சிறுத்தை ஒன்றின் கழுத்தில் இரும்பு கம்பி இறுக்கிய நிலையில் உயிருக்கு போரடியபடி உறுமிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்,

    இதனை அடுத்து பாலக்கோடு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வன விலங்குகளுக்கு மயக்க ஊசி செலுத்தும் மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்துபட்டது,

    சிறுத்தை மயங்கியதும் கழுத்தை இறுக்கியிருந்த இரும்பு கம்பி அகற்றபட்டு காயங்களுக்கு மருந்துகள் தடவி விட்ட பின்னர் கூண்டு ஒன்றில் சிறுத்தையை அடைத்து இரவோடு இரவாக ஒகேனக்கல் சின்னாறு வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.

    இறைச்சிக்காக மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடும் நபர்கள் வைத்த இரும்பு கம்பி வலையில் எதிர்பாராத விதமாக சிறுத்தை சிக்கியிருக்கிறது என்பது தெரிய வந்திருக்கிறது.

    கம்பியில் சிக்கி மீட்கப்பட்டிருக்கும் சிறுத்தை ஆண் சிறுத்தை என்பதும் வயது சுமார் 5 இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவி்க்கின்றனர்.

    வன விலங்குகளை வேட்டையாட இரும்பு வலை வைத்தவர்கள் யார் என்பது குறித்து பாலக்கோடு வனத்துறைனர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுமார் 6 மாதங்களாக 23 ஆடுகளை வேட்டையாடி கொன்றதாக கூறப்படுகிறது.
    • கன்றுகுட்டியை காட்டு விலங்கு மீண்டும் அடித்து கொன்றுள்ளது

    தக்கலை :

    கோதநல்லூர் பேரூராட்சி முட்டைக்காடு சரல்விளை பகுதியில் மலைச்சிங்கம் எனப்படும் காட்டு விலங்கு சுமார் 6 மாதங்களாக 23 ஆடுகளை வேட்டையாடி கொன்றதாக கூறப்படுகிறது. இதனை பிடிக்க வேண்டும் என்று அந்தப் பகுதி பொதுமக்கள், மாவட்ட கலெக்டர் மற்றும் வனத்துறையினரிடம் முறையிட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து கண்காணிப்பு ஒளிப்பதிவு கருவி பொருத்தப்பட்டு காட்டுவிலங்கு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மருந்துகோட்டை பகுதியில் கன்றுகுட்டியை காட்டு விலங்கு மீண்டும் அடித்து கொன்றுள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த காட்டு விலங்கால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை உறுதியான தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • வத்திராயிருப்பு அருகே வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கியது யார்?
    • தோட்ட உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை மாவட்டம் பேரையூர், தேனி மாவட்டம் மேகமலை ஆகிய வனப்பகுதிகள் இணைக்கப் ட்டு கடந்த 2021-ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர்- மேக மலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பொதுமக்கள் வனப் பகுதிக்குள் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளை வனத் துறையினர் விதித்தனர். மேலும் வனப்பகுதியில் யாரும் நுழைக்கிறார்களா? என்பதை கண்காணித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் வத்திரா யிருப்பு மலையடிவார பகுதிகளில் கடந்த ஆண்டு நாட்டு வெடிகுண்டு வைத்து பன்றிகளை வேட்டையாடிய நபரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் கான்சாபுரம் அருகே ஓடை யில் 9 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அதனைத்தொடர்ந்து அத்திக்கோவில் பகுதியில் உள்ள தனியார் தென்னந் தோப்பில் 5 நாட்டு வெடி குண்டுகளை பதுக்கி வைத் திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். வன விலங்குகளை வேட்டை யாடுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள் அடுத் தடுத்து சிக்கிய சம்பவம் வத்திராயிருப்பு பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் அத்தி கோவில் பகுதியில் வன விலங்குகளை வேட்டை யாடுவதற்காக சிலர் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த பகுதிகளில் இருந்த தோட்டங்களில் சோதனை செய்தனர்.

    அப்போது கான்சா புரத்தை சேர்ந்த சோலை யப்பன் என்பவருக்கு சொந்தமான தென்னந் தோப்பில் பதுக்கி வைத்தி ருந்த 4 நாட்டு வெடிகுண்டு களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். வன விலங்குகளை வேட்டையாடு வதற்காக அதனை அங்கு யாரோ மர்மநபர்கள் பதுக்கி வைத்திருந்தது விசாரணை யில் தெரியவந்தது.

    ஆனால் பதுக்கிவைத்தது யார்? என்பது தெரிய வில்லை. அவர்கள் யார்? என்று விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. மேலும் வனவிலங்குகள் வேட்டை கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்று தோட்ட உரிமையாளர் சோலை யப்பனிடம் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ×